யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நெதர்லாந்து தூதுவர் Ms.Bonnie Horbach இன்று சந்தித்து கலந்துரையாடினார்.
இன்று காலை 10 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, யாழ் மாவட்டத்தில் உள்ள தேவைகள் மற்றும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.