கோப்பாய் மத்தி பகுதியில் இனந்தெரியாதோரால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றது என்று கோப்பாய் காவல்துறையினர் கூறினர்.
இராசபாதை வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் திருத்தக உரிமையாளரான அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் (வயது 30) என்பவரே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
முகமூடியணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே குடும்பத்தலைவரை துரத்திச் சென்று வாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பித்தனர் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.