ஐரோப்பா முழுவதும் ஆட்கடத்தல் கும்பலை இயக்கிய குற்றச்சாட்டில் இலங்கையர்கள் 14 பேருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
தலைநகர் பரிஸுக்கு வடக்கே 80 கிமீ தொலைவில் உள்ள செரிஃபோன்டைன் கிராமத்தில் உள்ள மளிகைக் கடையில் இருந்து இந்த நடவடிக்கையை மேற்பார்வையிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முக்கிய சந்தேக நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறையும், ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து உக்ரைனில் இருந்து கண்டம் முழுவதும் இலங்கை மற்றும் பங்களாதேஷில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை நகர்த்துவதற்கான விலைகளையும் வழிகளையும் அவர் நிர்ணயித்ததாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மற்றொரு சந்தேக நபருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, மற்றவர்களுக்கு குறுகிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.