யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நேற்று (திங்கட்கிழமை) மதியம் 3.30 மணியளவில் பட்டா வாகனமும் துவிச்சக்கர வண்டியும் மோதியே விபத்து ஏற்பட்டது. மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான தா.தினேஷ் என்ற இளைஞரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.