இலங்கை கடல்பகுதியில் எல்லை தாண்டி நுழைந்ததாக்கூறி 12 தமிழ் நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (21) கைது செய்துள்ளனர்.
தமிழ் நாடு – நாகையில் இருந்து 40-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 நாட்களுக்கு முன்பு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தவர்களில் 11 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ் நாடு செய்திகள் கூறுகின்றன.
இந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், மீனவர்கள் 11 பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.