Home செய்திகள் பாடசாலை ஆய்வுகூடத்தில் இரசாயன கசிவு – மாணவர்கள் , ஆசிரியர்கள் வைத்தியசாலையில்!

பாடசாலை ஆய்வுகூடத்தில் இரசாயன கசிவு – மாணவர்கள் , ஆசிரியர்கள் வைத்தியசாலையில்!

28
0

புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் ஆய்வுகூடத்தில் ஏற்பட்ட இரசாயன கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட 3 ஆசிரியர்களும், 5 மாணவர்களும் வைத்தியசாலியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் (21) புதன்கிழமை காலை குறித்த பாடசாலையின் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த வேளையில் புரோமின் (Bromin) என்ற இரசாயன குவளை உடைந்ததன் காரணமாக இரசாயனம் ஆய்வுக்கூடம் முழுவதும் பரவியுள்ளது.

இதனால் அங்கிருந்த ஐந்து மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மூச்சுத் திணறல் காரணமாக புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.