Home தாயக செய்திகள் களைகொல்லியான “க்ளைபோசேட்” தடையை நீக்க விவசாய அமைச்சு முடிவு:

களைகொல்லியான “க்ளைபோசேட்” தடையை நீக்க விவசாய அமைச்சு முடிவு:

54
0

களைகொல்லியான “க்ளைபோசேட்” தடையை தொடர வேண்டுமா, இல்லையா என விவசாயப் பிரதிநிதிகள், வேளாண்மைத்துறை வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரிடமும் கருத்துக்களை கேட்டறிந்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர “க்ளைபோசேட்” இன் தடையை நீக்க முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அச்சிடுவதற்காக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கையொப்பத்துடன் அரசாங்க அச்சகத்தில் கையளிக்கப்பட்டதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கையில் களைகளை கட்டுப்படுத்துவதற்கான மாற்று வழிமுறைகளை அறிமுகப்படுத்தாமல் க்ளைபோசேட் தடைசெய்யப்பட்டதோடு, 2018இல் தேயிலை மற்றும் ரப்பரில் க்ளைபோசேட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணத்தினாலும், விவசாயத்திற்கு தேவையான உரம் இறக்குமதி இன்மையினாலும் கடந்த சில வருடங்களாக இலங்கையில் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டதோடு, மரக்கறிகளின் விலையும், அரிசி, பயறு, கச்சான் போன்றவற்றின் விலைகளும் பல மடங்கு உயர்வடைந்து மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை பாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.