தென்னிலங்கையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால் அங்கு பதட்ட நிலை காணப்பட்டது.
இன்று (15) பகல் கம்பஹா மகேவிட்ட பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.