Home செய்திகள் 2023 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில்!

2023 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றில்!

74
0

2023 வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் சமர்பித்து உரையாற்றவுள்ளார்.

நிலையான மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 2023 வரவு செலவுத் திட்டம், மூலதனச் சந்தை, ஏற்றுமதிச் சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், சமூக சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக வரவு செலவுத் திட்ட இலக்குகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கல்வி சுகாதார துறைகள் குறித்து அதிக கவனம் செலுத்தவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின்  பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதேவேளை, உறுதியளிக்கப்பட்ட  20 கிலோ ( ஒரு ஏக்கருக்கு) யூரியாவில் இதுவரை  14 கிலோ மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும், உறுதியளிக்கப்பட்ட பொட்டாசியத்தில்  ஒரு கிலோ கூட வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ள அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின்  செயலாளர் டிபி சரத் வரவு செலவு திட்டம்  உரங்களிற்கான அளவை அதிகரிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இச்சூழலில் இன்று முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்டமானது, இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமூக நலன்கள், கட்டாயம் தேவைப்படும் மக்களுக்கு வழங்குவது மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக தனியார் துறையை கட்டியெழுப்புவதற்கான கொள்கை பின்புலத்தை உருவாக்குவது குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் எனவும், 2023 வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் மூலம் நவீன உலகிற்கு ஏற்ற நவீன பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையை ஆரம்பிப்பதன் மூலம் இளைஞர்களுக்கான நாட்டைக் கட்டியெழுப்பும் புதிய வேலைத் திட்டம் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.