Home செய்திகள் அரியாலையில் இளைஞன் மீது வாள் வெட்டு!

அரியாலையில் இளைஞன் மீது வாள் வெட்டு!

45
0

யாழ்ப்பாணம் – அரியாலை தபால்கட்டை சந்தியில் நேற்று (10) மதிய வேளையில் உந்துருளியில் வந்த இருவர் அவ்வழியே வந்த நபரை, வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உந்துருளியில் வந்த தாக்குதல்தாரிகள் குடைக்குள் மறைத்து வைத்திருந்த வாளாலேயே குறித்த இளைஞனை வெட்டியதாக அதனை அவதானித்த மக்கள் தெரிவித்தனர்.