Home உலக செய்திகள் 305 பேருடன் கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகு சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்பு!

305 பேருடன் கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகு சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்பு!

57
0

சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக 305 இலங்கை அகதிகள் உள்ள கப்பல் மூழ்கிக் கொண்டிப்பதாக அக்கப்பலில் இருந்தவரொருவர் தெரிவித்த ஒலிப்பதிவு வெளியான நிலையில், அகதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 300 பேர், அவர்களின் படகு மூழ்க ஆரம்பித்த நிலையில் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த படகில் விபத்தில் சிக்கிய இலங்கையர் ஒருவர் இலங்கை கடற்படையை தொடர்புகொண்டு தானும் தனது குழுவினரும் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்ததையடுத்து, உடனடியாக செயற்பட்ட கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவிகளைக் கோரியுள்ளது.

இதனையடுத்து, படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு தகவல் தெரிவித்துள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.