Home உலக செய்திகள் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 625 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 625 பேருக்கு கொரோனா தொற்று!

62
0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 625 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (08) காலை வெளியிட்டது.

இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 62 ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 17 ஆயிரத்து 611 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 021 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 509 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இந்தியாவில் நேற்று மட்டும் 1,43,638 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.