பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றயைதினம் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தி இன்று திங்கட்கிழமை முதல் அரசியலமைப்பின் 21 வது திருத்தமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அரசியலமைப்பிற்கான 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைய நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், திருத்தங்கள் உள்ளடக்கப்பட்ட பின்னர் மூன்றாவது மதிப்பீட்டுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 174 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டிருந்தது.