நாடளாவிய ரீதியில் 1,298 குடும்பங்களைச் சேர்ந்த 4,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 31 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சீரற்ற வானிலை காரணமாக 9 வீடுகள் முழுமையாகவும் 381 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, மோசமான வானிலை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.