Home தாயக செய்திகள் அதிக வாக்குகளுடன் நிறைவேறியது 22 ஆவது திருத்தச் சட்டமூலம்!

அதிக வாக்குகளுடன் நிறைவேறியது 22 ஆவது திருத்தச் சட்டமூலம்!

52
0

இன்று (21) நாடாளுமன்றில் நடைபெற்ற அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூல வரைபு மீதான வாக்கெடுப்பில் 179 வாக்குகள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்றைய வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட 44 பேர் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூல வரைவுக்கு எதிராக சரத் விரசேகரவின் வாக்கு மட்டும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட வரைபு ஒரு மாயை என்றும், மக்களை ஏமாற்றும் யுக்தி என்றும், அதனால் எந்த பயனும் இல்லை எனவும் முழங்கித் தள்ளிய அரசியல் வாதிகள் அனைவரும் இன்றைய வாக்கெடுப்பில் அதே “22 ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு” ஆதரவாக வாக்களித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.