Home செய்திகள் புத்­த­ளம் நுரைச்­சோலை பகு­தியில் 5 கோடி பெறுமதியான போதைப்­பொ­ருளுடன் 6 பேர் கைது!

புத்­த­ளம் நுரைச்­சோலை பகு­தியில் 5 கோடி பெறுமதியான போதைப்­பொ­ருளுடன் 6 பேர் கைது!

41
0

இந்­தி­யா­வி­லி­ருந்து மன்­னார் மாவட்­டத்­தின் சிலா­பத்­துறை ஊடாக கடத்­தி­வ­ரப்­பட்­ட சுமார் 5 கோடி ரூபா பெறு­ம­தி­யா­ன கொக்கேய்ன் போதைப்­பொ­ருள் மன்­னார் பொலி­ஸா­ரால் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

மன்­னார் மாவட்ட குற்­றத்­த­டுப்பு பிரி­வுக்கு கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லின் பிர­கா­ரம் புத்­த­ளம் நுரைச்­சோலை பகு­தியில் தேடு­தல் நட­வ­டிக்­கைக்­காக சென்­றி­ருந்த மன்­னார் மாவட்ட குற்­றத்­த­டுப்பு பிரி­வி­னர் 1 கிலோ 26 கிராம் உயிர்­கொல்லி கொக்­கேய்ன் போதைப் பொருளை மீட்­ட­துடன், அதனை உடை­மை­யில் வைத்­தி­ருந்த 5 பேரையும் கைது செய்­துள்ளனர்.

இவர்­க­ளி­டம் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­க­ளுக்கு அமை­வாக மன்­னார் மாவட்­டத்­தின் நானாட்­டான் பிர­தேச செய­லர் பிரி­வில் 48 வய­து­டைய ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டதோடு, அவ­ரது வீட்­டி­லி­ருந்­தும் 506 கிராம் கொக்­கேய்ன் கைப்பற்றப்பட்டதாக பொலி­ஸார் தெரி­வித்­த­னர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 23 வயதிற்கும் 54 வயதிற்கும் உட்பட்டவர்கள் எனவும், அதில் நான்கு சிங்களவர்களும், இரு முஸ்லீம்களும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.