Home செய்திகள் நெடுங்கேணியில் துப்பாக்கிச் சூடு – 21 வயது பெண் பலி!

நெடுங்கேணியில் துப்பாக்கிச் சூடு – 21 வயது பெண் பலி!

43
0

வவுனியா – நெடுங்கேணி சிவாநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் மர்ம நபர் ஒருவர் யுவதி ஒருவரை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

நேற்றிரவு (18) குறித்த யுவதி வீட்டின் பின்புற வாசலுக்கு சென்ற போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதில் 21 வயதான யுவதி சம்பவ இடத்திலேயெ சாவடைந்த நிலையில், துப்பாக்கி பிரயோகம் செய்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த யுவதியின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, குறித்த கொலையாளியான துப்பாக்கி தாரியை நெடுங்கேணி பொலிஸார் தேடி வருகின்றனர்.