Home செய்திகள் மாதகல் பிரதேசத்தை அண்மித்த “திரு­வ­டி­ நிலை” கடற்­ப­ரப்­பில் கரையொதுங்கிய சட­லம்!

மாதகல் பிரதேசத்தை அண்மித்த “திரு­வ­டி­ நிலை” கடற்­ப­ரப்­பில் கரையொதுங்கிய சட­லம்!

40
0

இலங்கையின் வடபகுதியான மாதகல் பிரதேசத்தை அண்மித்த “திரு­வ­டி­ நிலை” கடற்­ப­ரப்­பில் ஆணொ­ரு­வ­ரின் சட­லம் நேற்­று கரையொதுங்கியுள்ளது.

குறித்த சட­லம் மீன­வர்­க­ளின் வலை­யில் சிக்­கிய நிலை­யில் இருந்­ததை அவ­தா­னித்த மீன­வர்­கள் இது தொடர்­பில் வட்­டுக்­கோட்டை பொலி­ஸா­ருக்­குத் தக­வல் வழங்­கி­னர்.

அதன் பின்­னர் சட­லம் மீட்­கப்­பட்டு உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதோடு, பொலி­ஸார் மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­னர்.