Home செய்திகள் மூத்த விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு!

மூத்த விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு!

47
0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மூத்த விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகப் பேரவை இதற்கான ஒப்புதலை இன்று வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்றுமுன்தினம்(01) சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய  பேராசிரியர் பதவி உயர்வுக்காக  விண்ணப்பித்த பேராசிரியர்களின் விண்ணப்பங்களுக்கான மதிப்பீடு முடிவுகள்  சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின்படி  கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நாகரிகங்கள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான அருட்கலாநிதி ஜே. சி. போல் றொகான் கிறிஸ்தவ நாகரிகத்தில் பேராசிரியராகவும், நுண்கலைத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தா. சனாதனன் நுண்கலைத் துறையில் கலை வரலாற்றுப் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.