Home செய்திகள் பொலிகண்டியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு!

பொலிகண்டியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு!

40
0

யாழ்ப்பாணம், வல்வட்டிதுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. 

வல்வெட்டிதுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தல் தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து இன்று அதிகாலை அங்கு சென்ற இராணுவத்தினர், கரையொதுங்கி வாடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 217 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதிகளை மீட்டனர்.

இவ்வாறு மீட்கபட்டவை வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.