உலக உணவுத் திட்டத்தால் கடந்த மாதம் (செப்டம்பர்) வெளியிடப்பட்ட உலகில் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பற்ற நிலை காணப்படும் நாடுகளில் ஆப்கானிஸ்தான், எதியோப்பியா, நைஜீரியா, தென் சூடான், சோமாலியா மற்றும் யேமன் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.அத்துடன், இலங்கையும் இந்த அபாய கட்டத்தை நெருங்கி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையானது கடும் உணவு தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்துள்ளது என உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த அறிக்கையை மேற்கோள்காட்டி சர்வதேச நாணய நிதியமும் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கை உட்பட 19 நாடுகளில் உணவு பாதுகாப்பற்ற நிலை காணப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.