Home செய்திகள் வெளிநாடொன்றுக்கு செல்ல முயற்சித்த அறுவர் கடற்படையினரால் கைது!

வெளிநாடொன்றுக்கு செல்ல முயற்சித்த அறுவர் கடற்படையினரால் கைது!

39
0

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வெளிநாடொன்றுக்கு செல்ல முயற்சித்த அறுவர் தலைமன்னார் பகுதியில் வைத்து, கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டு இளைஞர்களும், ஒரு பெண்ணுடன் மூன்று சிறுவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் மொறவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும்மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.