Home செய்திகள் யாழ்-பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற திலீபனின் 35வது நினைவு தினம்:

யாழ்-பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற திலீபனின் 35வது நினைவு தினம்:

38
0

தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம் இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்ட இந்த நினைவேந்தலில், பல்கலைக்கழக வளாகம் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு,  தியாக தீபம் தீலிபனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், மாணவர்கள் மட்டுமன்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஊழியர்கள் எனப் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.