Home உலக செய்திகள் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனிவாவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள்:

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனிவாவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள்:

37
0

பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடான கைதுகள் உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனிவாவில் இலங்கையர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டங்களின்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பாமான நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.