இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத்தரின் ஆகியோர் வேல்ஸின் புதிய இளவரசர் மற்றும் இளவரசி என்று மூன்றாம் சார்லஸால் பெயரிடப்பட்டனர்.
“இன்று, அவரை வேல்ஸ் இளவரசர் டைவிசோக் சிம்ருவை உருவாக்குவதில் நான் பெருமைப்படுகிறேன்,” என்று மன்னர் மூன்றாம் சாள்ஸ் கூறினார். இளவரசர் வில்லியமும், இளவரசி கேட் (கேத்தரின்) உம் எங்கள் தேசிய உரையாடல்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வழிநடத்துவார்கள்,” என்று அவர் கூறினார்.
96 வயதில் ராணி இறந்ததைத் தொடர்ந்து தேசத்திற்கு ஆற்றிய தனது முதல் உரையிலேயெ மன்னர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இதன்போது, தனது தாயின் இழப்பில் தனது “ஆழ்ந்த வருத்தத்தை” நாட்டிற்கு தெரிவித்தார். மேலும், அவரது அரவணைப்பு, நகைச்சுவை மற்றும் “எப்போதும் மக்களில் சிறந்ததைக் காணும் திறனை” பாராட்டினார். மறைந்த ராணி தனது 70 ஆண்டுகால ஆட்சியில் கொண்டிருந்த அதே “அசையாத பக்தியுடன்” தேசத்திற்கு சேவை செய்வதாக மன்னர் உறுதியளித்தார்.