
பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிஸபெத்தின் உடல்நிலை குறித்து அவரின் வைத்தியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மகாராணி 2 ஆம் எலிஸபெத் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என வைத்தியர்கள் சிபாரிசு செய்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பக்கிங்ஹாம் அரண்மனை இது போன்ற ஒரு அறிக்கையை வெளியிடுவது மிகவும் அசாதாரணமானது.
பிரிட்டனை 70 ஆண்டுகளாக ஆட்சிபுரிந்துவரும் 96 வயதான 2 ஆம் எலிஸபெத் மகாராணி 1952 ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய மட்டுமன்றி கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உட்பட பல நாடுகளின் அரசியாக இருந்துவருகிறார்.
மகாராணியின் குழந்தைகள் அனைவரும் அபெர்டீனுக்கு அருகிலுள்ள அவரது ஸ்காட்டிஷ் தோட்டத்தில் கூடடியுள்ளனர்.
ஸ்கொட்லாந்திலுள்ள தனக்குச் சொந்தமான பல்மோரல் மாளிகையில் தற்போது 2 ஆம் எலிஸபெத் அரசி தங்கியுள்ள நிலையில், அரச குடும்பத்தினர் பலர் தற்போது பல்மோரல் மாளிகைக்கு சென்றுகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மகாராணியின் உடல்நிலை குறித்த செய்தி வெளிவந்ததில் இருந்து கவலையடைந்துள்ள இங்கிலாந்தின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்கள் மகாராணி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருப்பதாக பிரதமர் லிஸ் ட்ரஸ் கூறியுள்ளார்.