கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 50,000 க்கும் மேற்பட்டவர்கள் மிக மோசமான போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக அத்துரலிய ரத்தன தேரர் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
போதைப் பொருள் பாவனையை தேசிய பிரச்சினையாக கவனத்தில் கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் சபையில் கேட்டுக் கொண்டார்.
கொழும்பு மாளிகாவத்தை,கொலன்னாவை மற்றும் வனாத்தமுல்ல பகுதிகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க விசேட சட்டம் இயற்றப்பட வேண்டுமென்றும் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.