கோடீஸ்வர வர்த்தகர்களுக்கும், தமக்கு நெருக்கமானோருக்கும் வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்க உதவி செய்வதாக கூறப்படும் சுங்கம் மற்றும் வருமான வரி திணைக்களத்தின் அதிகாரிகள் தொடர்பில் உளவுப் பிரிவு சிறப்பு அறிக்கையொன்றினை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளது.
உளவுப் பிரிவின் இவ் அறிக்கையினை மையமாக வைத்து குறித்த 600 அதிகாரிகளும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 600 அதிகாரிகள் தொடர்பில் இவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தி மேலதிக விடயங்களை அறிவிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவித்தன.
சுங்கத் திணைக்களம் மற்றும் வருமான வரித் திணைக்களம் ஆகியவற்றால் வசூலிக்க முடியுமான சுமார் 10 ஆயிரம் கோடி ரூபா வருமானம், அத்திணைக்களத்தில் அதிகாரிகளின் மோசடி மற்றும் கவனக் குறைவுகளால் அரசாங்கத்துக்கு இல்லாமல் போவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.