இலங்கையின் – யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 5 சிறுவர் உட்பட்ட 8 பேர் இன்று அதிகாலை தமிழகம் தனுஷ்கொடியை சென்றடைந்துள்ளனர்.
இலங்கை அகதிகள் சிலர் தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் தஞ்சமடைந்திள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த இந்திய கடலோர காவல் படை அவர்களை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையின் போது – பட்டிணி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள தமிழக முகாம்களில் தங்கியுள்ள தங்களது உறவினர்களுடன் சேர்ந்து வாழலாம் எனும் நோக்கோடு இலங்கை பணம் 4 லட்சம் ரூபாய் கொடுத்து தாம் படகில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களை அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும், அதிகாலை முதல் உணவின்றி கடும் சூறைக்காற்றுக்கு மத்தியில் உயிரை பாதுகாத்து கொண்டு
குறித்த அகதிகள் 8 பேரையும் விசாரணைகளின் பின்னர் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பிவைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் இவ் ஆண்டின் ஆரம்பம் முதல் தொடர்ந்துவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக தமது உயிர்களைக் காப்பாற்றும் நோகுடன் அகதிகளாக இவ்வருடத்தில் மட்டும் 143 பேருக்கு மேல் தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.