பிறேமதாஸவின் மகளும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் சகோதரியுமான துலாஞ்சலி பிரேமதாஸ தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனது இரண்டு பிள்ளைகளுடன் நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டை எரித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்த நிலையிலேயே சஜித் பிரேமதாசஸவின் சகோதரி நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.