எங்கள் சிறுவர்களின் எதிர்காலத்தை அழித்த “கோட்டாபயவை” நாட்டு மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்வார்கள் என நான் நினைக்கவில்லை எனவும், அவர் அரசியலிற்கோ, நாட்டை ஆள்வதற்கோ பொருத்தமானவர் என நான் கருதவில்லை எனவும் உதயங்கவீரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ எதிர்வரும் செம்பரெம்பர் மாதம் 3 ஆம் திகதி னாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் கோட்டபாயவை சுற்றியுள்ளவர்கள் அவரைமீண்டும் அரசியலிற்குள் இழுக்க முயல்கின்றனர். இது மீண்டும் மக்கள் எழுச்சிக்கும், அரசியல் இஸ்திரத்தன்மையை உருவாக்கவும் வழிவகுக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் உதயங்கவீரதுங்க தெரிவித்தார்.