வவுனியாவில் தாலிக்கொடியை அறுத்து தப்பி சென்ற இராணுவ வீரர் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா கனகராயங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியினை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்ற வேளையில், போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன் விரைந்து செயற்பட்ட அப்பகுதி பொதுமக்களால் குறித்த கள்ளன் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு பறித்து சென்றவர் சிவில் உடையில் சென்ற ஶ்ரீலங்கா இராணுவீரர் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அதிர்ச்சிக்குள்ளாகிய பொலிஸாரும், மக்களும் குறித்த நபரை கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படைத்தனர்.