
தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் ஶ்ரீலங்கா கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 10 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (16) இரவு தலைமன்னார் – குருசபாடு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே குறித்த 10 பேரையும் ஶ்ரீலங்கா கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில், படகு ஓட்டுநர்களான இருவர் உட்பட 4 ஆண்கள், 2 பெண்கள் மற்றும்18 வயதுக்குட்பட்ட 04 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்படடுள்ளது.