நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு நெருக்கடிக்கு தீர்வாக, கொழும்பு மாநகர சபை வளானத்தில் தோட்டப் பயிர்ச் செய்கையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயிர்ச்செய்கை நடுவதற்காக கொழும்பு மாநகர சபை ஊழியர்களால் நிலத்தை பதப்படுத்தி பயர்ச் செய்கைக்கு தயார்ப்படுத்தும் பணிகள் தற்போது மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் முடிந்தளவு சிறுதோட்டப் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுவதற்கு தேவையான வசதிகள் அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பயனை மக்கள் பெற்றுக்கொள்ளும்படி பொது மக்களை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.