Home செய்திகள் படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை சிறார்களுக்கு யாழ் பல்கலையில் அஞ்சலி!

படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை சிறார்களுக்கு யாழ் பல்கலையில் அஞ்சலி!

81
0

முல்லைத்தீவு – வல்லிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது ஶ்ரீலங்கா வான்படையினால் மிலேச்சத்தனமாக மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் பிரதான தூபியில் இன்று காலை 11:30 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவுருவ படத்திற்கு ஈகைச்சுடரேற்றப்பட்டதோடு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஒரு நிமிட அகவணக்கமும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜகுமாரால் படுகொலை தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

இதன்பொழுது யாழ் பல்கலைக் கழக மாணவ ஒன்றியத்தின் பிரதிநிதிகள், மாணவர்கள், பலகலைக் கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.