காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்துக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்ட பிரித்தானிய பிரஜையின் வீசாவை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இரத்துச்செய்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் இம்மாதம் 15 ஆம் தேதிக்கு முன்னர் நாட்டைவிட்டு வெளியேறுமாறு குறித்த பிரித்தானிய பிரஜைக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.