இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக மக்களின் சமூக ஊடக செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் “சமூக ஊடக ஒழுங்குமுறை” சட்டத்தை விரைவுபடுத்துமாறு பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் யோசனை முன்வைத்துள்ளனர்.
தேசிய பாதுகாப்புச் சபை நேற்று (10) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடிய போது இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனைய பாதுகாப்பு பிரதானிகளும் இதில் இணைந்துள்ளனர்.