இன்று முதல் நான்கு நாட்களுக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் வெப்பநிலை 37C (99F) ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அம்பர் தீவிர வெப்ப எச்சரிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது.
தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளுக்கான வானிலை அலுவலக எச்சரிக்கை வியாழன் நள்ளிரவு முதல் ஞாயிறு வரை இயங்கும்.
பல இடங்களில் தீ பரவுவதற்கான ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், வெப்ப அலையானது உடல்நலம், போக்குவரத்து மற்றும் வேலை நிலைமைகளை பாதிக்கும் எனவும், மேலும், நீர் பாதுகாப்பு சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில், வெப்பநிலை முதன்முறையாக 40C (104F) ஐ எட்டிய போன்று இந்த வாரம் எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும், சில பகுதிகளில் வெப்பம் உள்ளூர் அல்லது பிராந்திய பதிவுகளை நெருங்கலாம்.