இலங்கையில் மின்சார முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், நாட்டில் மின்சார முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கு அனுமதி கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து பல கோரிக்கைகள் கிடைத்துள்ள நிலையிலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.