கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்களை விடுவிக்கவும், அவசரகால சட்டத்தை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எவ்வித கலந்துரையாடலிலும் ஈடுபடப்போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி பிற்பகல் கலந்துரையாட வருமாறு ஜனாதிபதி அக் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே கஜேந்திரகுமார் எம்.பி இக் கருத்தை வெளியிட்டுள்ளார்.