Home செய்திகள் யோசப் ஸ்ராலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து யாழில் இன்று (05) ஆர்பாட்டம்!

யோசப் ஸ்ராலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து யாழில் இன்று (05) ஆர்பாட்டம்!

78
0

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் யோசப் ஸ்ராலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று (05) ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

இன்று வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் பேரூந்து நிலையம் முன்பாக இடம்பெற்று வருகிறது.

இதன் போது .

  1. * மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடிய யோசப்ஸ்ராலின் கைதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
  2. * யோசப் ஸ்ராலின் உட்பட்ட அனைத்து ஜனநாயக வழி போராட்டக்காரர்கள் அனைவரையும் உடன் விடுதலை செய்.
  3. * ஶ்ரீலங்கா அரசாங்கத்தின் பாசிசவாதத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்.
  4. * ஜனநாயக போராட்டக்காரர்கள் மீதான பொய் வழக்குகளை உடன் நிறூத்து.
  5. * ஜனநாயக வழி போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களை உடன் நிறுத்து.

போன்ற கோஷங்களை தாங்கிய பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.