கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இரண்டு கண்ணீர் புகை குண்டுகளை வைத்திருந்த 28 வயது ஆண் ஒருவரை கைது செய்துள்ளதாக இலங்கை பொலீசார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் அருணோதய மாவத்தை ஒபேசேகரபுர பகுதியைச் சேர்ந்தவராவார் எனவும்,அவரை இன்று (3) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.