சமூக ஊடகங்கள் மூலம் மக்கள் போராட்டம் குறித்த தகவல்களைப் பகிர்ந்ததாகக் குற்றம் சாட்டி, பிரித்தானியப் பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டை குடிவரவுத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.
கெய்லி ஃப்ரேசர் என்ற இளம் பெண், இன்ஸ்டாகிராம் மூலம் மக்கள் போராட்டம் குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தார்.
விசா நிபந்தனைகளை மீறியதற்காக அவரது பாஸ்போர்ட் காவலில் வைக்கப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, விசாரணைக்காக 07 நாட்களுக்குள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.