காலி முகத்திடல் கடற்கரையில் இன்று (01) அதிகாலை வேளையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை மீட்டுள்ள பொலிஸார், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமையும் (29) காலி முகத்திடல் கடற்கரையில், கொட்டாவையைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரின சடலமும் கரையொதுங்கியிருந்தது.
இதேவேளை, கடந்த மே 30ஆம் திகதி முதல் இதுவரை மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட சம்பவங்களில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்கத்கது.
தொடர்புபட்ட செய்திகள்: