Home தாயக செய்திகள் “யாழ் ஆரோக்கிய நகரம்” விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணி!

“யாழ் ஆரோக்கிய நகரம்” விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணி!

53
0

“யாழ் ஆரோக்கிய நகரம்” எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணியொன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இருந்து இன்று (01) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 7 மணியளவில் ஆரம்பித்த 10 கிலோ மீற்றர் தூரமுள்ள இந்த விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா, மருத்துவபீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமாரன், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன், யாழ் போதனா வைத்திசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றலுடன், பல்கலைக்கழகப் பணியாளர்கள், மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் உட்படப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடத்தின், சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத் துறையின் நேரடி ஒருங்கிணைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தலில் உலக சுகாதார ஸ்தாபனம் , யாழ். மாநகர சபை, யுனிசெப், சுகாதார சேவைகள் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, கல்வி அமைச்சு , அரச – அரச சார்பற்ற நிறுவனங்கள் , யாழ் மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலகங்கள் உட்படப் பல்வேறு தரப்பினரும் இதற்கு தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.