Home செய்திகள் நல்லூர் திருவிழாவில் கலந்துகொள்ளூம் மக்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு:

நல்லூர் திருவிழாவில் கலந்துகொள்ளூம் மக்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு:

60
0

மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா நோய்த்தொற்று காரணமாக நல்­லூர்த் திரு­வி­ழாக் காலத்­தில் பக்­தர்­கள் கட்­டா­யம் ‘மாஸ்க்’ அணி­ய­வேண்­டும் என்று யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் சுகா­தா­ரப் பிரி­வி­னர் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

இது தொடர்­பில் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் சுகா­தா­ரப் பிரி­வி­ன­ரால் விடுக்­கப்­பட்ட ஊடக அறிக்­கை­யில் மேலும் உள்­ள­தா­வது:

மீண்­டும் கொரோ­னாப் பர­வல் அதி­க­ரிக்­கும் அபா­யம் காணப்­ப­டு­வ­தால் ஆல­யத்­துக்கு வரு­ப­வர்­கள், உரிய முறை­யில் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருத்­தல் வேண்­டும், கைகளை அடிக்­கடி சவர்க்­கா­ரம் பாவித்து கழு­வு­தல் வேண்­டும், இயன்­ற­ளவு சமூக இடை­வெ­ளியை பின்­பற்ற வேண்­டும்.

தடி­மன், காய்ச்­சல், இரு­மல் போன்ற நோய் அறி­கு­றி­கள் இருப்­பின் ஆல­யத்­துக்கு வருகை தரு­வதை தவிர்த்து கொள்ள வேண்­டும்

உற்­ச­வ­கா­லத்­தில் ஆல­யத்­தின் சுற்­றா­ட­லி­லும் ஆல­யத்­துக்கு வரும் பாதை­க­ளி­லும் தாங்­கள் உள்­ளெ­டுக்­கக் கூடிய குடி­தண்­ணீர் மற்­றும் உண­வுப் பொருள்­கள் சுகா­தா­ர­மா­னவை என்­பதை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­வ­தோடு அது தொடர்­பி­லான முறைப்­பா­டு­களை 021 222 2645 என்­னும் தொலை­பேசி இலக்­கத்­துக்கு வழங்க முடி­யும்.

குழந்­தை­கள், சிறு­வர்­கள் விரும்பி உண்­ணும் இனிப்பு வகை­கள், சிற்­றுண்­டி­கள் சுகா­தா­ர­மற்ற முறை­யில் தயா­ரிக்­கப்­பட்டு அல்­லது விநி­யோ­கிக்­கப்­ப­டும் பட்­சத்­தில் உங்­கள் பிள்­ளை­க­ளின் ஆரோக்­கி­யத்­தைக் கருத்­திற்­கொண்டு அவற்றை வாங்­கிக் கொடுப்­ப­தைத் தவிர்ப்­ப­தோடு குறித்த தொலை­பேசி இலக்­கத்­துக்கு உட­ன­டி­யா­கத் தெரி­யப்­ப­டுத்­து­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள்.

அதி­க­ள­வான சீனி (சிவப்பு, செம்­மஞ்­சள் ஒட்­டப்­பட்ட குடி­பா­னங்­கள்) நிற­மூட்­டி­கள், சுவை­யூட்­டி­கள் சேர்க்­கப்­பட்ட ஆரோக்­கி­யத்­தைக் கெடுக்­கும் உண­வு­களை இயன்­ற­ள­வில் தவிர்த்­துப் பிள்­ளை­க­ளின் நல­னைப் பாது­காத்­துக் கொள்­ளு­மாறு வேண்­டப்­ப­டு­கி­றீர்­கள்,

வீதி­யில் பரப்­பப்­பட்­டி­ருக்­கும் மண்­ணின் சுகா­தா­ரத்­தைப் பேணும் முக­மாக ஆலய சுற்­றா­ட­லில் வதி­யும் மக்­கள் தங்­கள் வளர்ப்பு நாய்­க­ளைத் திரு­விழா நாள்­க­ளில் வீதிக்கு வரு­வ­தைத் தவிர்த்­துக் கொள்­ளு­மா­றும், ஆல­யத்­துக்கு வரும் அடி­ய­வர்­கள், தம்­மு­டன் தமது வளர்ப்பு நாய்­களை அழைத்து வரு­வ­தைத் தவிர்த்­துக்­கொள்­ளு­மா­றும் அறி­வு­றுத்­தப்­ப­டு­கி­றீர்­கள்.

அறி­வு­றுத்­தல்­களை மீறும் பட்­சத்­தில் அவை கட்­டாக்­காலி நாய்­க­ளா­கக் கரு­தப்­பட்டு அப்­பு­றப்­ப­டுத்­தப்­ப­டும் அல்­லது பதி­வுக் கட்­ட­ணத்­தின் பிர­கா­ரம் சபை­யால் சட்ட நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டும். அத்­து­டன் குடி­யி­ருப்­பா­ளர்­கள் தங்­கள் வளர்ப்பு நாய்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் பூச்சி மருந்தை நாய்­கள் உட்­கொள்­கின்­ற­னவா என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

ஆல­யத்­தின் சுற்­றா­ட­லில் பிளாஸ்­ரிக் மற்­றும் பொலித்­தீன் பொருள்­களை எடுத்­து­வ­ரு­தல் முற்­றா­கத் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மா­றும் பொது­மக்­கள் அன்­பு­டன் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள்.

அங்­கப்­பி­ர­தட்­ச­ணம் மற்­றும் அடி­ய­ழித்­தல் போன்ற நேர்த்­திக் கடன்­களை நிறை­வேற்­றும் அடி­ய­வர்­க­ளின் நன்மை கரு­தி­யும் மண்­ணின் சுகா­தா­ரத்­தைப் பேணும் வகை­யி­லும் ஆல­யத்­தின் சுற்­றா­ட­லில் வெளி வீதித்­த­டைக்­குள் பாத­ணி­கள் அணிந்து செல்­வதை முற்­றா­கத் தவிர்க்­கு­மா­றும் கோவில் வீதி­க­ளில் பரப்­பப்­பட்­டுள்ள மண­லின் மீதி­ருந்து உண­வுப் பொருள்­களை உண்­ப­தைத் தவிர்த்­துக் கொள்­ளு­மா­றும் (கச்­சான் கோது போடு­தல், கார உணவு மீதி­கள் படிந்த ரெஜி­போம் மற்­றும் பேப்­பர், பைகள் போடு­தல் போன்­ற­வற்­றைத் தவிர்த்­தல்) கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள். அவற்­றைக் கழி­வுத் தொட்­டி­க­ளில் இட்டு ஒத்­து­ழைப்பு நல்­கு­மா­றும் கேட்­டுக்­கொள்­கி­றோம்.

ஆல­யச் சூழ­லில் நட­மா­டும் போது மக்­கள் கழி­வுப் பொருள்­களை வீச வேண்­டிய சந்­தர்ப்­பங்­க­ளில் அவற்­றைத் தரம் பிரித்து அதற்­கென வைக்­கப்­பட்­டுள்ள கழி­வுத் தொட்­டி­க­ளில் இடு­மாறு அன்­பு­டன் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றீர்­கள்.

திரு­வி­ழாக் காலங்­க­ளில் இயங்­கும் தற்­கா­லிக உணவு கையா­ளும் நிலை­ய­மாக அமை­யும் வியா­பார நிலை­ய­மா­னா­லும், உண­வு­கை­யா­ளும் நிலை­யத்­தின் அடிப்­ப­டைத் தன்­மை­கள் பூர்த்தி செய்­யப்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­து­டன், உணவு கையாள்­வோர் தற்­கா­லிக அடிப்­ப­டை­யி­லே­னும் அனு­ம­தி­களை வைத்­தி­ருத்­தல் அவ­சி­யம். இந்த நடை­முறை இறுக்­க­மா­கக் கடைப்­பி­டிக்­கப்­ப­டும். மீறும் பட்­சத்­தில் சட்ட நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­வது தவிர்க்­கப்­பட முடி­யா­தது. அத­னால் நேர காலத்­து­டன் எமது பணி­ம­னை­யின் தலை­மைப் பொதுச்­சு­கா­தா­ரப் பரி­சோ­த­க­ரைத் தொடர்பு கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­தப்­ப­டு­கி­றீர்­கள்.

ஆல­யச் சுற்­றா­ட­லில் தற்­கா­லிக வியா­பார நிலை­யங்­கள் அமைக்­கப்­ப­டும் பட்­சத்­தில் அவற்­றில் ஒலி­பெ­ருக்­கி­க­ளைச் சத்­த­மாக அல­ற­வி­டு­வதோ திரைப்­ப­டப் பாடல் இசைப்­ப­தையோ தவிர்த்து ஒத்­து­ழைப்பு நல்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­டு­கி­றீர்­கள்.

வீடு­க­ளில் குறித்த தினங்­க­ளில் மட்­டும் தண்­ணீர்ப் பந்­தல் மற்­றும் அன்­ன­தான நிகழ்­வு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­ப­வர்­கள் அவற்­றைச் சுகா­தார நடை­மு­றைக்கு அமைய நடத்­து­மா­றும் மீறும் பட்­சத்­தில் சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு உள்­ளாக நேரி­ட­லாம் என்­ப­தை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றோம்.

பொது­மக்­கள் தங்­கள் வீடு­க­ளில் டெங்கு நுளம்­பு­கள் பெரு­கா­த­வாறு சுற்­றா­ட­லைப் பேணு­வ­து­டன் திரு­வி­ழாவை முன்­னிட்டு பிற மாவட்­டங்­க­ளில் இருந்து தாங்­கள் காய்ச்­ச­லு­டன் வரும் பட்­சத்­தில் உரிய மேல­திக நட­வ­டிக்­கை­கள் மேற்­கொண்டு காய்ச்­ச­லுக்கு உட்­பட்­ட­வரை மருத்­துவ பரி­சோ­தனை செய்­தல் வேண்­டும்.

கோவி­லுக்கு அண்­மித்த சூழ­லில் வதி­யும் பொது­மக்­கள் உற்­சவ காலத்­துக்கு முன்­பாக தங்­கள் வீட்­டுக் கிண­று­களை இறைத்­தும் நீர்த் தாங்­கி­க­ளைச் சுத்­தம் செய்­தும் வாராந்­தம் கிணற்­றுக்­குக் குளோ­ரின் இடு­வ­தற்கு சுகா­தார பகு­தி­யி­ன­ரின் உத­வி­யைப் பெற்­றுக்­கொள்­ளு­மா­றும் அறி­வு­றுத்­தப்­ப­டு­கி­றீர்­கள் – என் அறிவிக்கப்பட்டுள்ளது.