பண்டாரகம சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (30) பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் ஓய்வு அறையில் இருந்தே முதலில் தீ பரவியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் அங்கு எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்தவர்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதேசமயம் சற்று நேரத்தில் அங்கு வந்த ஹொரணை மாநகர சபையின் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீயை முற்றாகக் கட்டுப்படுத்தினர்.