Home செய்திகள் “அடக்குமுறைக்கு எதிரான பொதுமக்கள் அணிதிரள்வு” மாநாடு!

“அடக்குமுறைக்கு எதிரான பொதுமக்கள் அணிதிரள்வு” மாநாடு!

59
0

“அடக்குமுறைக்கு எதிரான பொதுமக்கள் அணிதிரள்வு” என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று (30) சனிக்கிழமை மாநாடு ஒன்று நடைபெற்றது.

காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் பங்குபற்றலுடன் இந்த மாநாடு நடைபெற்றது.

இதன்போது, நான்கு அம்ச கோரிக்கைகள் அடங்கிய கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது. 

1. ஜனநாயக விரோத கைதுகள், கடத்தல்கள் மற்றும் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறும்

2. அவசரகால சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட சட்டங்களை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் எனவும்
3. அடிப்படை மனித உரிமைகளை உடனடியாக பாதுகாக்க வேண்டும் எனவும்
4. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்

அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கூட்டறிக்கையில் பலரும் கையெழுத்திட்டுள்ளனர்.

இதன்போது, அடக்குமுறைக்கு எதிராக தேசிய அளவில் கண்டன பேரணியை நடத்தவும் ஒன்றிணைந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.