தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அரச அலுவலகங்களுக்கு பணியாளர்களை அழைப்பதை மட்டுப்படுத்தும் உத்தரவு மேலும் ஒரு மாதத்திற்கு அமுலில் இருக்கும் என பொது நிர்வாகம் மற்றும் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரமாவது;
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அரச அலுவலகங்களுக்கு பணியாளர்களை அழைப்பதை மட்டுப்படுத்தும் உத்தரவு மேலும் ஒரு மாதத்திற்கு அமுலில் இருக்கும். இதனை, தவறாக பயன்படுத்தி கடமைக்கு சமுகமளிக்கக்கூடிய அதிகாரிகள், கடமைக்கு சமுகமளிக்காத நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அத்தியாவசிய பொது சேவைகள் மற்றும் இணையவழியாக முடியாத கடமைகளை நடத்துவதற்கு தேவையான பணியாளர்களை அழைப்பதை இந்த சுற்றறிக்கை தடுக்காது.
இவ்வாறு பொது நிர்வாகம் மற்றும் உள்விவகார அமைச்சு வெளியிட்டுள்ள குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
