காலிமுகத்திடலில் போராட்டக்கார்கள் மீது இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இடம்பெற்று வருகிறது.
காலிமுகத்திடலில் கூடியிருந்த போராட்டகாரர்கள் மீதான ரணில் – ராஜபக்ஷாக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்” எனும் தொனிப்பொருளில் குறித்த போராட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது.
மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், நாட்டை சரியாக நிர்வகிக்க தவறியவர்கள் பதவி விலக வேண்டும், மக்கள் மீதான அடக்குமுறை கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும், என இன்றைய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கோஷமிட்டு வருகின்றநர்.